நான் எனது தொழிலில் தோற்றுவிட்டேன்! – காஃபி டே உரிமையாளர் வி.ஜி.சித்தார்த்தா திடீர் மாயம்!

Published by
மணிகண்டன்

ஆசியாவிலேயே மிகப்பெரிய காபி தோட்டம் வைத்துள்ள ஒரே நிறுவனம் என பெயர் கொண்டது காபி டே நிறுவனம். இந்த காபி டே உரிமையாளர் தான் காணாமல் போன வி.ஜி.சித்தார்த்தா. இவர் கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணன் அவர்களின் மருமகனாவார்.

இவர் சிக்மங்களூருவில் உள்ள தனது அலுவலகத்திற்கு சென்றுவிட்டு, கேரளாவிற்கு செல்ல வேண்டும் என டிரைவரிடம் கூற, மங்களூரு சாலையில் கார் சென்றது. அப்போது, நேத்ராவதி ஆற்றின் அருகே கார் செல்கையில் அந்த பகுதியில் காரை நிறுத்தி, திரும்பி வருவதாக டிரைவரிடம் கூறிவிட்டு சென்றுவிட்டார்.

ஆனால் வெகுநேரமாக அவர் வராததால், சந்தேகமடைந்த ட்ரைவர் வீட்டிற்கு தகவல் கொடுக்க, பின்னர் அப்பகுதியில் போலீசார் விரைந்தனர்.அந்த பகுதியில் நேத்ராவதி ஆறு இருப்பதாலும், உல்லால் பாலத்தில் இருந்து ஒருவர் குதித்ததை பார்த்ததாக அக்கம் பக்கத்தினர் கூறியதாலும், அந்த பகுதியில் சுமார் 200 மீட்பு படையினர் அங்கு விரைந்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதுகுறித்து, மேலும் விசாரிக்கையில் அவர் எழுதியாக ஓர் கடிதமும்  போலீசாருக்கு கிடைத்துள்ளது. அதில், குறிப்பிட்டுள்ளது என்னவென்றால், ‘ கடந்த 37 ஆண்டுகளில் 30 ஆயிரம் நேரடி தொழிலாளர்களை உருவாக்கியுள்ளேன். இருந்தும் எனது தொழிலில் நான் தோற்றுள்ளேன். இதுவரை நான் என்னுடைய முயற்சி அனைத்தையும் கொடுத்துவிட்டேன்.

என்மீது நம்பிக்கை வைத்த அனைவரிடமும் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். எனது கம்பெனியின் பங்குளை வாங்கியிருந்த தனியார் நிறுவனத்தை சேர்ந்தவர் அந்த பங்குகளை வாங்க சொல்லி என்னிடம் அழுத்தம் கொடுத்து வருகிறார். எனது நண்பரிடம் அதிகமாக கடன் வாங்கியுள்ளேன் அதனையும் திருப்பி கொடுக்க முடியாத நிலையில் உள்ளேன்.

எனது கடன்களுக்கு நானே பொறுப்பு. என்னுடன் வேலை பார்த்தவர்களுக்கு இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. என கூறினார். மேலும் , எனது பெயரில் உள்ள சொத்துக்களின் விவரங்களை இதில் இணைத்துள்ளேன் அதனை வைத்து கடன்களை செலுத்துமாறும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கடிதத்தின் உண்மை தன்மையை தற்போது போலீஸ் தரப்பு ஆராய்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

33 minutes ago

தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்… சில்லி சில்லியாய் நொறுக்கிய இந்தியா.! சிதறி கிடக்கும் ஏவுகணை, ட்ரான் பாகங்கள்.!

டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…

54 minutes ago

பாகிஸ்தான் ராணுவ முகாம்களை தாக்கி அழித்த காட்சிகளை வெளியிட்டது இந்திய ராணுவம்.!

டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…

1 hour ago

விராட் கோலி ஓய்வு? பிசிசிஐ உடன் ரகசிய பேச்சுவார்த்தை..,

டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…

2 hours ago

“தொடர்ந்து தவறான தகவல்களை பரப்பி பொய்ப் பிரச்சாரம் செய்யும் பாகிஸ்தான்” – விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…

2 hours ago

ராணுவத்திற்கு உதவ நாங்க தயார்! சண்டிகரில் குவியும் இளைஞர்கள்!

சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…

2 hours ago