தனக்கு சொந்தமான நிலத்தில் தன் மனைவியுடன் உழவு வேலை செய்துவரும் ஒடிசாவின் எம்எல்ஏ மனோகர் ரந்தாரிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
ஒடிசா மாநிலத்தில் தற்பொழுது நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜூ ஜனதாதள ஆட்சி நடைபெற்று வருகிறது. ஒடிசாவில் உள்ள நபரங்கப்பூர் மாவட்டத்தின் தொகுதியில் பிஜூ ஜனதாதள எம்எல்ஏவாக இருப்பவர் தான் மனோகர் ரந்தாரி. சமீபத்தில் ஒடிசா முழுவதும் கனமழை பெய்ததைடுத்து விவசாய பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் எம்எல்ஏ மனோகர் ரந்தாரி தனக்கு சொந்தமான 25 ஏக்கர் பண்ணை நிலத்தில் கடந்த சில நாட்களாக மனைவியுடன் இணைந்து உழவு செய்து வருகிறார். அவரது மனைவி அரசு ஊழியராக இருந்தாலும் அவருடன் காலை ஐந்து மணிக்கே வயலுக்குச் செல்லும் எம்எல்ஏ, காலை 10 மணி வரை மனைவியுடன் சேர்ந்து வயலில் உழவு பணிகளை செய்து வருகிறார்.
அதன் பின் மனைவி அலுவலகத்திற்கு சென்றதும் எம்எல்ஏ மதியம் 12 மணிவரை உழவு வேலை செய்து விட்டு வீடு திரும்பி விடுகிறார். தனது நிலத்தில் தானே உழவு வேலை செய்யும் எம்எல்ஏ மனோகர் ரந்தாரியை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக் ஆகியோர் பாராட்டியுள்ளனர். இதுகுறித்து எம்எல்ஏ மனோகர் ரந்தாரி கூறுகையில், சிறுவயதில் இருந்து விவசாய பணிகளை தான் செய்து வருகிறேன். எம்எல்ஏ ஆவதற்கு முன்பே எனது நிலத்தில் நானே உழுது வந்தேன். எனக்கு விவசாயம் தொழில் தான் ஆண்டுதோறும் நெல் மற்றும் சோளம் பயிரிடுவதன் மூலம் ஏழு லட்ச ரூபாயை ஈட்டித் தருகிறது. விவசாயம் வளர்ச்சி அடைந்தால் தான் நாட்டில் பட்டினியும் குறையும். எனவே இளைஞர்கள் விவசாயத்தில் ஆர்வம் காட்ட வேண்டும் எனவும் அவர் அறிவுரை கூறியுள்ளார்.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…