ஹரியானாவில் பிரபல ஹோட்டல்களின் ஊழியர்கள் 14 பேருக்கு கொரோனா!

Published by
Rebekal

ஹரியானாவில் உள்ள பிரபல உணவகங்களின் ஊழியர்கள் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, 4 உணவகங்கள் சீல் வைப்பு.

ஹரியானாவில் முர்தால் எனும் சாலையோர உணவகங்களில் பணி செய்யும், ஊழியர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொண்டபோது  60க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு கொரானா வைரஸ் இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து சுகாதாரத்துறை அமைச்சர் ஹரியானாவில் உள்ள அனைத்து உணவகங்களிலும் உள்ள ஊழியர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு அறிவித்துள்ளார்.இதனடிப்படையில் ஏற்கனவே நான்கு சாலையோர உணவகங்கள் சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்பொழுது மேலும் சில உணவகங்களில் உள்ள ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்ட பொழுது மேலும் நான்கு உணவகங்களின் ஊழியர்கள் 14 பேருக்கு கொரானா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு அந்த உணவகங்கள் சீல் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் கடந்த ஒரு வாரத்தில் பல உணவகங்களில் இருந்து 950 கொரோனா வைரஸ் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இதற்கு முன்பு இந்த உணவகங்களுக்கு வந்து உணவருந்திய வாடிக்கையாளர்களின் விவரங்கள் ஏற்கனவே நோட்டுகளில் எழுதப்பட்டுள்ளதால் அவர்களை விரைந்து கண்டறியும் பணியில் தற்போது ஈடுபட்டுள்ளனர். அங்குள்ளவர்கள் மேலும் பலருடன் தொடர்பு கொள்ளக் கூடும் என்பதால் பலருக்கும் பரவி விடக்கூடாது என வாடிக்கையாளர்களை கண்டறிந்து அவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Published by
Rebekal

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

10 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

11 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

12 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

13 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

15 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

16 hours ago