1 கோடியாக அதிகரித்த கொரோனா பாதிப்பு – உலகளவில் இந்தியா எந்த இடத்தில் உள்ளது தெரியுமா?

Published by
Rebekal

இதுவரை இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1 கோடிக்கும் அதிகமாக உயர்ந்து, உலகளவில் இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது.

கடந்த ஒரு வருட காலமாக உலகம் முழுவதையும் ஆக்கிரமித்து ஆட்டி படைத்து வரும் கொரோனா வைரஸ் தற்பொழுது வரையிலும் தனது வீரியத்தை குறைத்துக்கொள்ளவில்லை. உலகின் பல நாடுகளில் உள்ள லட்சக்கணக்கான மக்கள் இந்த வைரஸ் பாதிப்பால் தொடர்ந்து உயிரிழந்து வருகின்றனர். அது போல இந்தியாவிலும் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் தாக்கம் தீவிரமடைந்து கொண்டே சென்றதால், பல லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததுடன் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கையையும் இழந்தனர்.

கடந்த மூன்று மாதங்களாக தான் இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் குறைந்துள்ளது. குறிப்பாக செப்டெம்பர் மாதங்களில் எல்லாம் உச்ச நிலையை அடைந்திருந்தது. நாளொன்றுக்கு 98 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தினமும் புதிதாக பாதிக்கப்பட்டுக்கொண்டிருந்தனர், உயிரிழப்பு ஐந்தாயிரத்துக்கும் அதிகமாக தினமும் இருந்தது. ஆனால், தற்பொழுது மக்களின் வாழ்வாதாரம் கருதி ஊரடங்கு தளர்வுகளை அரசாங்கம் கொடுத்திருந்தாலும், கொரோனாவின் வீரியம் குறைந்து கொண்டே தான் செல்கிறது.

இதுவரை இந்தியாவில் மொத்தமாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் எண்ணிக்கை தற்பொழுது 1 கோடியை கடந்துள்ளது. உலகளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்காமுதலிடத்திலும், பிரேசில் மூன்றாவது இடத்திலும் உள்ளது. இந்தியா உலகளவில் இரண்டாவது இடத்தில் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக இந்தியாவில் 26 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 342 பேர் உயிரிழந்துள்ளனர். புதிய பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே சென்றாலும், பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து கொண்டே தான் செல்கிறது. தொடர்ந்து அரசு கூறும் விதிமுறைகளை கடைபிடித்து முக கவசம் அணிவதையும் சமூக இடைவெளியை பின்பற்றுவதையும் வழக்கப்படுத்தி கொள்வோம். கொரோனா இல்லாத நாடக இந்தியாவை உருவாக்குவோம்.

Published by
Rebekal

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

7 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

8 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

9 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

9 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

11 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

12 hours ago