இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1071ஆக உயர்வு .!பலி எண்ணிக்கை 29 ஐ எட்டியது.!

கொரோனா வைரஸ் 150க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது.இதனால் பல நாடுகளில் நாளுக்கு நாள் உயிரிழப்பும், பாதிப்பும் அதிகரித்து கொண்டே வருகிறது.
இந்தியாவில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1071 ஆக அதிகரித்துள்ளது.
உயிரிழப்பின் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா , கேரளா உள்ளது. மகாராஷ்டிராவில் 193, கேரளா 194 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனா வைரஸிலிருந்து 100 குணமடைந்துள்ளார்கள் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 33,983 ஆக அதிகரித்துள்ளது. பாதித்தவர்களின் எண்ணிக்கை 722,664 ஐ எட்டியுள்ளது. இருப்பினும், வைரசால் பாதிக்கப்பட்ட 151,793பேர் குணமடைந்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025