கொரோனாவின் 2-வது அலை பரவல் பொருளாதார ரீதியாக மிகப் பெரிய அளவில் ஆபத்தை ஏற்படுத்தும் – ரிசர்வ் வங்கி ஆளுநர்

The 2nd wave of the corona virus will continue to be a major challenge for the Indian economy, the Reserve Bank of India has said.

கொரோனா வைரஸின் 2-வது அலை பரவல், இந்திய பொருளாதாரம் தொடர்ந்து மீட்கப்படுவது மிகப்பெரிய சவாலாக இருக்கும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஓராண்டிற்கும் மேலாக கொரோனா தொற்று அதிகமாகி வருகிற நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த உலக நாடுகள் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை பரவல், கட்டுக்கடங்காமல் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்த வைரஸால் பாக்கப்படுவோரின் எண்ணிக்கையும் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அரசு சில புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இந்நிலையில், ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்ததாஸ் அவர்கள், கொரோனா வைரஸ் பரவலின் 2-வது அலை குறித்து கூறுகையில், தேவை நிலைமைகளை மேம்படுத்துதல், அரசாங்கத்தின் முதலீட்டு மேம்பாட்டு நடவடிக்கைகள், வளர்ச்சி வாய்ப்புகளுக்கு தலைகீழாக அமைகின்றன. இருப்பினும் கொரோனா வேகமாக அதிகரித்து வருவதால், இந்திய பொருளாதாரம் தொடர்ந்து மீட்கப்படுவது மிகப்பெரிய சவாலாக இருக்கும்  என்று தெரிவித்துள்ளார்.