உத்தர பிரதேசத்தில் மேலும் 2 நாட்களுக்கு இரவு நேர ஊரடங்கு நீட்டிப்பு!

A night curfew has been imposed in Uttar Pradesh for two more days, till May 6 at 7 am.

உத்திரப்பிரதேசத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மேலும் இரண்டு நாட்களுக்கு, அதாவது மே 6 காலை 7 மணி வரை நீட்டித்து, உத்தரவிடப்பட்டுள்ளது.

நாடு முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தனது தீவிரத்தை அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது. தினமும் லட்சக்கணக்கான மக்கள் நாடு முழுவதும் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கின்றனர். உத்திரப்பிரதேச மாநிலத்திலும்  தினமும் புதிதாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதுவரை 12 லட்சத்து 80 இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 12 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் கட்டுப்பாடுகள் கடமையாக்கப்பட்டு மக்கள் பாதுகாப்புடன் இருக்கவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது தினமும் இரவு 8 மணி முதல் காலை 7 மணி வரையிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு மே 4-ஆம் தேதி காலை 7 மணி உடன் முடிவடைகிறது. ஆனால் தற்போது உத்தரப்பிரதேச மாநிலத்தில் உயிரிழப்புகளும், பாதிப்புகளும் தொடர்ந்து கொண்டே செல்வதால் மீண்டும் இந்த உத்தரவு இரண்டு நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது மே 6ஆம் தேதி காலை 7 மணி வரையிலும் இந்த ஊரடங்கு நீட்டிக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. அவசரமான தேவைகள் இருப்பவர்கள் மட்டும் வெளியில் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.