Categories: இந்தியா

கரணம் தப்பினால் மரணம்! ரீல்ஸ்காக இப்படியா பண்ணுவீங்க?

Published by
பால முருகன்

புனே : ரீல்ஸ் செய்யும் ஆர்வத்தில் பெண் ஒருவர் ஆபத்தை உணராமல் அந்தரத்தில் தொங்கும் அதிர்ச்சியான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஸ்மார்ட் போன்கள் பயன்பாடு அதிகமானதில் இருந்து சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் செய்வதும் அதிகமாகி விட்டது என்றே சொல்லலாம். சமூக வலைதளங்களில் இளைஞர்கள் மற்றும் முதியவர்கள் பல்வேறு நடனமாடி கொண்டும் வித்தியாசமாக ஸ்டண்ட் செய்து வீடியோ வெளியீட்டு வருகிறார்கள். ஒரு சில வீடியோக்கள் பார்ப்பதற்கு நகைச்சுவையாக இருந்தாலும் ஒரு சில வீடியோ எரிச்சல் அடைய வைத்துவிடும்.

அப்படி தான் தற்போது ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி கண்டனத்தை தூண்டியுள்ளது. புனே – ஜம்புல்வாடி சுவாமிநாராயண் மந்திர் அருகே பழமையான கட்டிடம் ஒன்று இருக்கிறது. அந்த கட்டிடத்தின் மேற் பகுதியில் பெண் ஒருவர் ஏறிக்கொண்டு ஒருவருடைய கையை பிடித்து கீழே தொங்கி கொண்டு இருந்தார்.

இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் மெயின் ரோட்டை ஒட்டி ஒரு உயரமான கட்டிடம் இருப்பதை காணலாம். அந்த கட்டிடத்தில் ரீல்ஸ் செய்ய இரண்டு இளைஞர்களும் ஒரு இளம் பெண்ணும் வருகிறார்கள். அதற்கு முன்னதாக மூவரும் ஒன்றாக கட்டிடத்தில் ஏறினர். அந்த காட்சிகளை வாலிபர் ஒருவர் தனது செல்போனில் படம்பிடித்து கொண்டிருந்த போது, திடீரென அந்த பெண் ஒருவரின் கையை பிடித்துக்கொண்டு கீழே இருக்கும் ஆழத்தை உணராமல் தொங்கினார்.

கரணம் தப்பினால் மரணம் என்ற வகையில் அந்த பெண் தொங்கிய வீடியோ வைரலாகி வரும் நிலையில், பலரும் ஒரு ரீல்ஸ்காக இப்படியா பண்ணுவீங்க? எனவும் இது பற்றி நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

Published by
பால முருகன்

Recent Posts

நாசாவுடன் இணைந்த நெட்ஃபிக்ஸ்.! இனி விண்வெளி பயணத்தை நேரடியாக பார்க்கலாம்.!

வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…

2 hours ago

கொலை செய்தது உங்கள் அரசு.., “SORRY” என்பது தான் உங்கள் பதிலா? – எடப்பாடி பழனிச்சாமி.!

சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…

2 hours ago

‘இந்த செயல் மன்னிக்க முடியாதது’.. அஜித்குமார் கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம் – மு.க.ஸ்டாலின் அறிக்கை.!

சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…

3 hours ago

“யாராலும் நியாயப்படுத்த முடியாத தவறு” – முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு.!

சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…

3 hours ago

“ட்ரம்பின் வரி மசோதா நிறைவேறினால் அடுத்த நாளே உதயமாகும் கட்சி” – எலான் மஸ்க் அதிரடி.!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…

5 hours ago

”இது கொடூரமான சம்பவம்.., பிரேத பரிசோதனை அறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது” – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை சரமாரி கேள்வி.!

மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…

6 hours ago