பழமையான 40 லட்சம் வாகனன்ங்கள் கொண்ட பதிவெண்களை ரத்து செய்துவிட்டோம் என்று டெல்லி அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறது.
unknown nodeடெல்லியில் அதிகளவு காற்று ஏற்படுகிறது.இந்தியாவிலே காற்று மாசு அதிமாக உள்ள மாநிலம் டெல்லி என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.இந்நிலையில் தான் மாசுவை கட்டுப்படுத்தும் வகையில் 10 ஆண்டுகள் பயன்படுத்தப்பட்ட டீசல் வாகனங்கள் மற்றும் 15 ஆண்டுகள் வாய்ந்த பழைய பெட்ரோல் வாகனங்களை டெல்லி என்சிஆர் சாலைகளில் இயக்குவதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
unknown nodeஇதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.இந்த வழக்கில் ஆஜரான டெல்லி அரசு சார்பு வழக்கறிஞர் உச்சநீதிமன்றம் மற்றும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் வழிகாட்டுதலின்படி சுட்டிக்காட்டிய 40 லட்சம் பழைய வாகனங்களின் பதிவெண்களை கொண்ட வாகனங்களை டெல்லி அரசு ரத்து செய்துவிட்டதாக கூறினார்.
unknown nodeஇது மட்டுமல்லாமல் நவம்பர் 30 முதல் டிசம்பர் 30 வரை டெல்லிக்குள் நுழையும் ஒவ்வொரு சரக்கு வாகனங்களை அடையாளம் காண 13 நுழைவு வாயில்களிலும் ரேடியோ அதிர்வெண் கொண்ட சாதனம் பொருத்தப்பட உள்ளதாக உச்சநீதிமன்றத்தில் டெல்லி அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.
unknown nodeதீர்ப்பு மாநிலத்திற்கு தேவை என்ற போதிலும் பதிவெண் ரத்தான வாகன ஓட்டிகள் சற்று கவலை அடைந்துள்ளனர்.ஆனால் மாநிலத்தின் காற்று மாசுப்பாடு குறைய அரர எடுத்த இந்த முடிவிற்கு ஆதரவு தெரிவிக்கின்றனர் மக்கள்.
DINASUVADU