டெல்லி தீவிபத்து : உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிதி -முதலமைச்சர் அறிவிப்பு

Published by
Venu
  • டெல்லி அனஜ்மண்டி பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 43 பேர் உயிரிழந்தனர்.
  • தீ விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ10 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

டெல்லி உள்ள அனஜ்மண்டி பகுதியில் சாலையில் உள்ள ஒரு தொழிற்சாலையில் தொழிலாளர்கள் தூங்கி கொண்டு இருக்கும் போது இன்று அதிகாலை  திடீரென தீ விபத்து ஏற்பட்டது.இந்த தீ விபத்து குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.பின்னர் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.ஆனால் இந்த  தீ விபத்தில் எதிர்பாராத விதமாக 43 பேர் உயிரிழந்துள்ளனர்.

சுமார் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.காயமடைந்த அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு  அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தீவிபத்து நடைபெற்ற இடத்தில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.இதன் பின்னர் அரவிந்த் கேஜ்ரிவால் செய்தியாளர்களிடம் பேசுகையில்,தீ விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ10 லட்சம் நிதி உதவி வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் நிதி வழங்கப்படும் மற்றும்  அரசு செலவில் முழு சிகிச்சை அளிக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் தீவிபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

 

 

Published by
Venu

Recent Posts

பையன் ஹீரோ ஆகிட்டான் ரொம்ப பயமா இருக்கு! விஜய் சேதுபதி பேச்சு!

பையன் ஹீரோ ஆகிட்டான் ரொம்ப பயமா இருக்கு! விஜய் சேதுபதி பேச்சு!

சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…

12 hours ago

ஹர்திக் மட்டும் இல்லனா கோப்பை வந்திருக்காது! கேப்டன் ரோஹித் சர்மா ஓபன் டாக்!

டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…

13 hours ago

சிதம்பரம் அருகே கொடூரம்…காதல் விவகாரத்தில் மகளையே கொன்ற தந்தை!

கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…

14 hours ago

தண்ணீர் கலந்த டீசல்…நடுவழியில் நின்ற ம.பி. முதல்வர் கான்வாய் வாகனங்கள்!

மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…

14 hours ago

யாருடனும் தொடர்பு இல்லை ப்ளீஸ் கொடுங்க..ஜாமீன் கேட்கும் நடிகர் கிருஷ்ணா!

சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…

15 hours ago

இஸ்ரேல் போட்ட ஸ்கெட்சில் இருந்து ஈரான் தலைவர் காமெனி தப்பியது எப்படி? வெளியான சீக்ரெட்!

ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…

15 hours ago