உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் 3000க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்நிலையில், இந்தியாவில் 3 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், இது குறித்து மக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை என பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவாமல் தடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது என்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன் தீவிர பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.
unknown nodeமேலும் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு அமைச்சகங்களும், மாநில அரசுகளும் இணைந்து செயல்படுகின்றன. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்படுவதால் பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என பதிவிட்டிருந்தார். இந்த பதிவுடன் வைரஸ் பரவாமல் தடுப்பது குறித்த தற்காப்பு தகவல்களையும் பகிர்ந்துள்ளார்.