பீகார் முதல்வர் நடைப்பயிற்சியின் போது, பாதுகாப்பை உடைத்து சென்ற பைக்… இருவர் கைது.!

பீகார் முதல்வர் நிதிஷ் குமார், இன்று நடைப்பயிற்சியின் போது பைக்கில் வந்த நபர்கள் பாதுகாப்பை தாண்டி சென்றதால் பரபரப்பு.
பீகார் முதல்வர் நிதிஷ்குமார், இன்று காலை வழக்கமான நடைப்பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது திடீரென்று பைக்கில் வந்த நபர்கள், முதல்வரின் பாதுகாப்புப் பகுதியில் அத்துமீறி நுழைந்ததற்காக இருவரும் பாட்னா போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பைக்கில் வந்த நபர்கள் கிட்டத்தட்ட பீகார் முதல்வரை மோதியிருக்கக்கூடும்.
அதே நேரம் நிதிஷ் குமார் தன்னைக் காப்பற்றிக்கொள்ள சட்டென நடைபாதையில் குதித்ததாக போலீஸ் அதிகாரி தெரிவித்தார். இந்த சம்பவம் சர்குலர் சாலைக்கு அருகில் அரசியல் தலைவர்கள் வசிக்கும் பகுதியில் நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். போலீசார் பைக்கில் வந்த இருவரையும் உடனடியாக கைது செய்தனர், இந்த சம்பவம் குறித்து இருவரையும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025