அருணாச்சலப்பிரதேசத்தில் மிதமான நிலநடுக்கம்..!

அருணாச்சலப்பிரதேசத்தில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

அருணாச்சலப்பிரதேசத்தில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

இன்று பிற்பகல் 3.06 மணியளவில் அருணாச்சலப்பிரதேசத்தில் உள்ள சாங்லாங்கில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது இந்த இடத்திலிருந்து தென்மேற்கில் 70 கிமீ தொலைவில் ஏற்பட்டுள்ளது.

மேலும், இந்த நிலநடுக்கம் மாநிலத்தின் லோஹித், தேசுவுக்கு அருகில் 48 கிமீ ஆழத்தில் உணரப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவாகியிருப்பதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.