ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியா வருவோருக்கு மின்னணு விசா முறையை மத்திய உள்துறை அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டிலுள்ள தலிபான் பயங்கரவாதிகளுக்கும், அந்நாட்டு அரசுக்கும் இடையேயான போர் முடிவுக்கு வந்துள்ள நிலையில், தலிபான் பயங்கரவாதிகள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளனர். இந்நிலையில் தீவிரவாதிகள் வசம் ஆட்சி போய்விட்டதால் ஆப்கானிஸ்தானில் இருக்கும் தங்கள் நாட்டு தூதரகங்களை மீட்கும் பணிகளை உலக நாடுகள் தொடங்கியுள்ளன.
இந்த வகையில் இந்தியாவும் அங்குள்ள நாட்டு மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. நேற்று முன்தினம் 129 பேருடன் ஒரு விமானம் இந்தியா வந்துள்ள நிலையில், நேற்று காபூல் விமான நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக விமான நிலையம் மூடப்பட்டது. இன்று அதிகாலை மீண்டும் கபூல் விமான நிலையம் திறக்கப்பட்டது.
தற்பொழுதும் 120 இந்திய அதிகாரிகளுடன் கபூலில் இருந்து இந்தியாவிற்கு இரண்டாவது விமானம் புறப்பட்டு உள்ள நிலையில், ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்கள் தாயகம் திரும்ப ஆன்லைனில் விசா பெறலாம் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன் மூலமாக இந்தியாவிற்குள் நுழைய விரைவாக விசா வழங்க முடியும் என்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…
சென்னை : குரூப் 2, 2ஏ பிரதான தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அறிவிப்பு ஒன்றையும் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் சட்டத்துக்குப் புறம்பாக தங்கியுள்ள பாகிஸ்தான் பங்களாதேஷை சேர்ந்தவர்களை வெளியேற்ற தமிழக அரசை வலியுறுத்தியும் பயங்கரவாத தாக்குதலை…
மதுரை : வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு ஐந்து நாட்களாக கொடைக்கானலில் நடைபெற்று வந்தது.…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 24 அன்று பிரதமர் நரேந்திர மோடி, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ளவர்களும், அவர்களை…