ஒவ்வொரு விவசாயியும், தொழிலாளியும் ஒரு சத்தியாகிரக போராளி தான்!

Rahul Gandhi said that every farmer and worker is a satyagraha fighter and they will get their rights back.

ஒவ்வொரு விவசாயியும், தொழிலாளியும் ஒரு சத்யாகிரக போராளி தான். அவர்கள் தங்களின் உரிமைகளை திரும்ப பெறுவார்கள் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் இரண்டாவது  மாதமாக தொடர்ந்து வருகிற நிலையில், போராட்டத்துக்கு முடிவு கொண்டு வருவதில் மத்திய அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

போராடும் விவசாயிகளுடன் மத்திய அரசு ஆறு முறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இருப்பினும் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இந்நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விவசாயிகள் நடத்திய போராட்டத்தை சத்தியாகிரகப் போராட்டத்துடன் ஓப்பிட்டு ட்விட்டரில் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில் நாடு சம்பரன் (சத்தியாகிரகம்) போன்ற சோகத்தை எதிர்கொள்ளப் போகிறது. ஆங்கிலேயே அரசு அப்போது பண்ணையார்களின் ஆதரவாளர்களாக இருந்தது. இப்போது மோடியின் நண்பர்கள் அந்த பண்ணையார்களாக உள்ளன. ஆனால், ஒவ்வொரு விவசாயியும், தொழிலாளியும் ஒரு சத்யாகிரக போராளி தான் .அவர்கள் தங்களின் உரிமைகளை திரும்ப பெறுவார்கள் என தெரிவித்துள்ளார்.