Uttar Pradesh [File Image]
உத்தரபிரதேசம் : எதிர்பாராமல் நடக்கும் விபத்து சம்பவங்களில் சிலர் பலியாகும் செய்திகளை பார்த்தோம் என்றாலே நமக்கு வேதனையாகிவிடும். அப்படி தான் உத்தரபிரதேசம்ஹர்தோய் மாவட்டத்தில், பெட்ரோல் பங்கில் நின்று கொண்டிருந்த பேருந்து ஓட்டுநர் இல்லாமல் நகர்ந்து மோதி பெட்ரோல் நிலைய ஊழியர் தேஜ்பால் என்பவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று காலை பஸ் ஒன்று பெட்ரோல் பங்கிற்கு வந்து இருந்தது. அப்போது அருகில் பெட்ரோல் நிலைய ஊழியர் பைக் ஒன்றுக்கு காற்று அடித்து கொண்டு இருந்தார். பின், நின்று கொண்டு இருந்த அந்த பேருந்து திடீரென ஓட்டுநர் இல்லாமலே மெதுவாக நகர்ந்து அருகில் அமர்ந்து பைக்கிற்கு காற்று அடித்து கொண்டிருந்த ஊழியர் மிதி மோதியது.
பின்னர் நடைபாதையில் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு பேருந்து மீது மோதியது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியுடன் வேகமாக பேருந்தை நோக்கி ஓடினார்கள். பிறகு இதில் படுகாயம் அடைந்த ஊழியர் தேஜ்பாலை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
ஓட்டுநர் இல்லாத பேருந்து ஒருவர் மீது மோதிய சம்பவம் சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இந்த அதிர்ச்சியான வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், இதுகுறித்து மாநகர இன்ஸ்பெக்டர் சஞ்சய் பாண்டே கூறுகையில், சக்கரங்களுக்கு முன்பு போடப்பட்டிருந்த செங்கற்கள் அகற்றப்பட்டதாலும், பஸ் நின்ற இடத்துக்கு அருகே சரிவு இருந்ததாலும் விபத்து ஏற்பட்டது என கூறினார்.
டெல்லி : இந்தியாவின் விமானப் பாதுகாப்பு தொடர்பான குறைபாடுகள் குறித்து சமீபத்திய DGCA தணிக்கைகள் பல முக்கியமான பிரச்சினைகளை வெளிப்படுத்தியுள்ளன.…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி இந்த கூட்டத்தொடரின் போது இல்லாதது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா…
சென்னை : தமிழ்நாடு பாஜகவில் புதிய மாநில நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், நடிகை குஷ்பு உள்பட 14 பேர்…
சென்னை : நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு (EOW)…
அமெரிக்கா : அமெரிக்காவுடன் சுமுகமான வர்த்தக உடன்பாடு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நாளை மறுநாள் (ஆகஸ்ட் 1-ஆம் தேதி) முதல்…
ஆந்திரா : நாசா மற்றும் இஸ்ரோ கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்ட 'நிசார்' செயற்கைக்கோள் இன்று (ஜூலை 30, 2025) வெற்றிகரமாக…