விவசாயிகள் போராட்டம்..டெல்லி-குருகிராம் எல்லையில் போக்குவரத்து நெரிசல்..!

Punjab farmers march on the road from Gurugram to Delhi in the name of 'Delhi Salo' in protest of the Agriculture Act.

மத்திய அரசு கொண்டு வந்த மூன்று விவசாய சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ‘தில்லி சாலோ’ என்ற பெயரில் தில்லி நோக்கி பஞ்சாப் விவசாயிகள் குருக்ராமில் இருந்து டெல்லிக்கு செல்லும் சாலையில் பேரணியில் ஈடுபட்டனர்.

அப்போது, ஹரியானா எல்லையில் தடுப்புகளை அமைத்து காவல்துறை விவசாயிகளைத் தடுத்தனர். கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும், தண்ணீரைப் பீய்ச்சியடித்தும் காவல்துறையினர் கலைத்தனர். இந்நிலையில்,அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.