நாடு முழுவதும் உள்ள தீர்ப்பாயங்களின் பணியிடங்களை நிரப்பாமல் இருப்பதற்கு கண்டனம் தெரிவித்தார் உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி.
நாடு முழுவதும் பல்வேறு தீர்ப்பாயங்களில் உள்ள காலியாக பணியிடங்களை நிரப்ப வேண்டும் என தொடர்ந்து மத்திய அரசுக்கு, உச்சநீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தும், கால அவகாசம் வழங்கியும், இந்த பணியிடங்களை மத்திய அரசு இதுவரை நிரப்பவில்லை என்று கூறப்படுகிறது.
எனவே, இதுதொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, உச்சநீதிமன்ற நீதிபதிகள் வழங்கும் தீர்ப்புகள், உத்தரவுகளை மத்திய அரசு மதிப்பதே இல்லை என்று தலைமை நீதிபதி என்.வி.ரமணா அதிருப்தி தெரிவித்துள்ளார். தீர்ப்பாயங்களை தொடர்ந்து நடத்த விருப்பம் இல்லை என்றால், அனைத்து சட்டங்களையும் ரத்து செய்துடுமாறும் கடுமையாக கூறியுள்ளார்.
நாடு முழுவதும் உள்ள தீர்ப்பாயங்களின் பணியிடங்களை நிரப்பாமல் இருப்பது ஏன் என்றும் மத்திய அரசு எங்களது பொறுமையை மிகவும் சோதித்து பார்க்கிறது எனவும் தெரிவித்த தலைமை நீதிபதி, உடனடியாக எங்களது தீர்ப்பை செயல்படுத்தும் பணிகளை பாருங்கள் என்று கூறி இந்த வழக்கிற்கு ஒத்திவைத்தார்.
சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…
டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…
கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…
மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…