யோகி ஆதித்யநாத் மீது எப்.ஐ. ஆர் பதிவு செய்ய வேண்டும் – ஆம் ஆத்மி எம்.பி.சஞ்சய் சிங் புகார்.!

Published by
பாலா கலியமூர்த்தி

மாநில அரசின் அலட்சியத்தால் சேதன் செளகான் இறந்ததால் முதல்வர் யோகி ஆதித்யநாத் மீது எப்.ஐ. ஆர் பதிவு செய்ய வேண்டும் – ஆம் ஆத்மி கட்சி எம்.பி சஞ்சய் சிங்.

முன்னாள் கிரிக்கெட் வீரரும் உத்தர பிரதேச மாநில அமைச்சருமான சேதன் செளகான், கடந்த மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு லக்னோவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பிறகு குருகிராம் பகுதியில் உள்ள மற்றோரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். செளகானுக்கு, சிறுநீரகம் செயலிழந்ததால் செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 16-ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனையடுத்து, கொரோனவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சேதன் செளகான், உத்தர பிரதேச அரசின் அலட்சியத்தால் தான் இறந்தார் என ஆம் ஆத்மி கட்சி எம்.பி.சஞ்சய் சிங் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், சேதன் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு தரமில்லாத சிகிச்சை அளித்ததால் தான் அவர் உயிரிழந்தார்.

இந்நிலையில், மாநில அரசின் அலட்சியத்தால் மட்டுமே சேதன் சவுகான் இறந்ததால், உத்ரபிரேதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யுமாறும், யு.பி. சேதன் சவுகானின் மரண வழக்கில் யு.பியின் கல்வி அமைச்சர் சுரேஷ் கன்னா மற்றும் இயக்குனர் பி.ஜி.ஐ.எம். ஆகியோர் மீதும் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய வேண்டும் என்று லக்னோ காவல் ஆணையருக்கு ஆம் ஆத்மி கட்சி எம்.பி சஞ்சய் சிங் கடிதம் எழுதியுள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…

6 hours ago

தகர்க்கப்பட்ட விமானங்கள்.., பாகிஸ்தான் விமானி உயிருடன் கைது.!

ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…

7 hours ago

எல்லையில் உச்சகட்ட பரபரப்பு – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள்.!

லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…

8 hours ago

ட்ரோன் அட்டாக் எதிரொலி: இருளில் மூழ்கிய மைதானம்.., பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியிலேயே நிறுத்தம்.!

தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…

8 hours ago

ஒலித்தது அபாய எச்சரிக்கை: ஜம்மு காஷ்மீர் ஏர்போர்ட்டுக்கு பாகிஸ்தான் குறி… நெத்தியடி கொடுத்த இந்தியா!

பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…

9 hours ago

”இந்தியா பதிலடி கொடுக்க இதுதான் காரணம்” – எடுத்துரைத்த இரு பெண் சிங்கங்கள்.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…

9 hours ago