ரூ.1 லட்சம் வரை அபராதம்.! விதிகளை மீறினால் அபராதம் இரட்டிப்பு.!

Published by
பாலா கலியமூர்த்தி

மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் முன்மொழியப்பட்ட ஒலி மாசு விதிமுறைகளை மீறுவதால் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படலாம் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் ஒப்புதல் அளித்துள்ளது.

தலைநகர் டெல்லியில் ஒலி மாசு விதிகள் குறித்து ஆராய உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.பி.கார்க் தலைமையிலான கண்காணிப்புக் குழு ஒன்றை அமைக்குமாறு தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவர் ஆதர்ஷ்குமார் கோயல் உத்தரவிட்டார். ஒலி மாசு மீறல்களுக்கு தேசிய மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்திருந்த அபராதங்களை நாடு முழுவதும் அமல்படுத்த சட்ட உத்தரவுகளை பிறப்பிக்க என்ஜிடி (தேசிய பசுமை தீர்ப்பாயம்) தெரிவித்துள்ளது.

அதன்படி, ஒலி மாசு விதிமுறைகளை மீறுவோருக்கு ஒலிபெருக்கிகள் மற்றும் பொது முகவரி அமைப்புகளை கைப்பற்றவும், ரூ.10,000 அபராதம் விதிக்கவும், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் (சிபிசிபி) எடுத்துரைத்துள்ளது. அதில், 1000 கே.வி.ஏ க்கும் அதிகமான திறன் கொண்ட டீசல் ஜெனரேட்டர்களில் இருந்து வரும் ஒலி மாசுபாட்டிற்கு ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்க முடிவு செய்துள்ளது.

மேலும் கட்டுமான இடங்களில் அனுமதிக்கப்பட்ட சத்தத்திற்கு மேல் எழுப்பினால் உபகரணங்கள் பறிமுதல் செய்யவும், ரூ.50,000 அபராதம் விதிக்கப்படும். குடியிருப்பு பகுதிகளில் பகலில் சத்தம் அளவு 55 டெசிபல் மற்றும் இரவில் 45 டெசிபல் என அனுமதிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. இதனையடுத்து அனுமதிக்கப்பட்ட வரம்புகளுக்கு அப்பாற்பட்ட ஒலியை ஏற்படுத்தும் பட்டாசுகளை வெடிக்க கடும் அபராதம் விதிக்கவும் மத்திய மாசு கட்டுப்பட்டு வாரியம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஒரு குடியிருப்பு பகுதியில் பட்டாசு வெடித்ததற்காக ஒரு நபருக்கு ரூ.1,000 மற்றும் silence மண்டலத்தில் ரூ.3,000 அபராதம் விதிக்கப்படலாம். தொழில்துறை பகுதிகளில் சத்தம் அளவு பகலில் 75 டெசிபல் மற்றும் இரவில் 70 டெசிபல் வரை இருக்கலாம். மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகள் போன்ற சத்தம் தடைசெய்யப்பட்ட பகுதிகள் பகலில் 50 டெசிபல் மற்றும் இரவில் 40 டெசிபல் வரை அதிகமாக இருக்கலாம். பொது பேரணி அல்லது ஊர்வலத்தில் இதே குற்றத்திற்கான அபராதம் முறையே குடியிருப்பு மற்றும் silence மண்டலங்களுக்கு ரூ.10,000 மற்றும் ரூ.20,000 ஆகும்.

ஒரு நிலையான வளாகத்திற்குள் விதிகள் மீண்டும் மீறப்பட்டால் அபராதம் ரூ.20,000 ஆக இரட்டிப்பாகும். ஒரே தவறை இரண்டு முறைக்கு மேல் செய்தால் ரூ.1 லட்சம் அபராதம் மற்றும் வளாகத்திற்கு சீல் வைக்கப்படும் என்று சிபிசிபி தனது அறிக்கையில் எடுத்துரைத்துள்ளது. இதற்கான விதிகளை மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் விரைவில் அறிவிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

13 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

15 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

15 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

16 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

18 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

19 hours ago