சிறுமியின் உள்ளாடையை கழற்ற வற்புறுத்தியது பலாத்காரம் செய்ததற்கு சமம் என்று கல்கத்தா உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
சிறுமியின் உள்ளாடையை வற்புறுத்தி கழற்றுவது கற்பழிப்புக்கு சமம் என கல்கத்தா உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கல்கத்தாவில் 2007 ஆம் ஆண்டு மே மாதம் 7 ஆம் தேதி சிறுமியை ராபி ராய் என்பவர் தனியான இடத்திற்கு இழுத்துச்சென்று வலுக்கட்டாயமாக சிறுமியின் உள்ளாடையை கழற்றி உள்ளார். உள்ளாடையை கழற்றிய பின்பு சிறுமி அலறத் தொடங்கியதால், சிறுமியின் சத்தம் கேட்டு சம்பவ இடத்துக்கு விரைந்த மக்கள் குற்றவாளியை பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
unknown nodeபோலீசார் ராபி ராய் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். 2008 ஆம் ஆண்டு மேற்கு தினாஜ்பூரில் உள்ள கீழ் நீதிமன்றம் அவருக்கு ஐந்தரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது மற்றும் அவருக்கு ரூ.3,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தது. இதனையடுத்து நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து ராபி ராய் கல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். ராய் அவரது மனுவில், பாதிக்கப்பட்ட சிறுமி மீது தனக்கு எந்த தவறான எண்ணமும் இல்லை என்றும், சிறுமியின் மீது தனது தந்தையின் பாசத்தை வெளிப்படுத்தியதாகவும் கூறினார்.
unknown nodeஇவரது வழக்கை விசாரித்த நீதிபதி அனன்யா பந்தோபாத்யாய், “பாதிக்கப்பட்ட சிறுமி தனது உள்ளாடைகளைத் திறக்க மறுத்ததால், அவர் அதை வலுக்கட்டாயமாக அகற்றியுள்ளார். இது கற்பழிப்பு அல்லது கற்பழிப்பு முயற்சிக்கு சமம்” என்று கூறினார். இந்த உத்தரவை பிறப்பித்த நீதிபதி பந்தோபாத்யாய் கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தார். மேலும் மருத்துவப் பரிசோதனையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகவில்லை என்பது உறுதியானது.