முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் இன்று விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் இன்று விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் 2 உதவியாளர்கள் கைதான நிலையில் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
அனில் தேஷ்முக் அமைச்சராக இருந்தபோது ரூ.100 கோடி மாமூல் வசூலித்த தர வேண்டும் என மும்பை முன்னாள் காவல் ஆணையர் பரம்பீர் சிங் குற்றம் சாட்டினார். இதைத்தொடர்ந்து, அனில் தேஷ்முக் மீது சிபிஐயும், அமலாக்கத்துறையும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்தனர்.
கடந்த ஏப்ரல் 5-ம் தேதி அமைச்சர் பதவியிலிருந்து அனில் தேஷ்முக் விலகினார். அனில் தேஷ்முக் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதைத்தொடர்ந்து, அமலாக்கத் துறையினா் நாகபுரியில் உள்ள அனில் தேஷ்முக் வீடுகள், பங்களாக்களில் சோதனை நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…