பாஜகவில் இணைந்தார் பஞ்சாப் முன்னாள் சபாநாயகர் சரண்ஜித் சிங்!

பஞ்சாப் முன்னாள் சபாநாயகர் சரண்ஜித் சிங் அத்வால் பாஜகவில் இணைந்தார்.

Charanjit Singh Atwal

பஞ்சாப் முன்னாள் சபாநாயகர் சரண்ஜித் சிங் அத்வால் பாஜகவில் இணைந்தார்.

பஞ்சாப் சட்டப்பேரவையின் முன்னாள் சபாநாயகர் சரண்ஜித் சிங் அத்வால், டெல்லியில் பாஜக தலைவர் ஜேபி நட்டா முன்னிலையில் இன்று பாஜகவில் இணைந்தார். முன்னாள் சபாநாயகர் சரண்ஜித் சிங் அத்வால் சிரோமணி அகாலிதளத்தின் (எஸ்ஏடி) முதன்மை உறுப்பினர் பதவியில் இருந்து ஏப்ரல் 19- ஆம் அன்று ராஜினாமா செய்திருந்தார். 14-வது மக்களவையில் பில்லூர் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்திய அத்வால், இரண்டு முறை பஞ்சாப் சட்டசபையின் சபாநாயகராக பணியாற்றியுள்ளார்.