கேரளாவின் நான்கு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது!

Published by
Rebekal

புரேவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கேரளாவில் உள்ள திருவனந்தபுரம், கொல்லம், பதனம்திட்டா மற்றும் ஆலப்புழா ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக புரேவி எனும் புயல் ஏற்பட்டுள்ளது. இந்த புயல் இன்று நண்பகல் நேரத்தில் பாம்பனுக்கு மிக அருகில் மையத்தில் இருக்கும் எனவும் 90 கிலோமீட்டர் வேகத்தில் காற்றின் வேகம் சூறாவளி புயல் போல இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. தமிழகத்தில் உள்ள தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமேஸ்வரம், சிவகங்கை தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. மீனவர்களும் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கன்னியாகுமரிக்கு இடையே தெற்கு தமிழ்நாடு கடற்கரையில் வெள்ளிக்கிழமை அதிகாலை புயல் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

நிவாரண குழு மற்றும் களப்பணியாளர்கள் தயார் நிலையில் இருக்கின்றனர். இந்தப் புரேவி புயலை கருத்தில் கொண்டு இன்று கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் கொல்லம், பத்தனம்திட்டா மற்றும் ஆலப்புழா ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து கூறியுள்ள பிரதமர் புயல் காரணமாக தமிழகத்தின் சில பகுதிகளில் நிலவக்கூடிய சூழ்நிலைகள் குறித்து அறிந்து உள்ளதாகவும், தமிழகத்துக்கு சாத்தியமான அனைத்து ஆதரவையும் தான் வழங்க உள்ளதாகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாசிக்க கூடியவர்கள் குடும்பம் மற்றும் அவர்களின் பாதுகாப்பிற்காக தான் பிரார்த்திக்கிறேன் எனவும் கூறியுள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

பையன் ஹீரோ ஆகிட்டான் ரொம்ப பயமா இருக்கு! விஜய் சேதுபதி பேச்சு!

பையன் ஹீரோ ஆகிட்டான் ரொம்ப பயமா இருக்கு! விஜய் சேதுபதி பேச்சு!

சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…

2 hours ago

ஹர்திக் மட்டும் இல்லனா கோப்பை வந்திருக்காது! கேப்டன் ரோஹித் சர்மா ஓபன் டாக்!

டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…

3 hours ago

சிதம்பரம் அருகே கொடூரம்…காதல் விவகாரத்தில் மகளையே கொன்ற தந்தை!

கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…

4 hours ago

தண்ணீர் கலந்த டீசல்…நடுவழியில் நின்ற ம.பி. முதல்வர் கான்வாய் வாகனங்கள்!

மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…

4 hours ago

யாருடனும் தொடர்பு இல்லை ப்ளீஸ் கொடுங்க..ஜாமீன் கேட்கும் நடிகர் கிருஷ்ணா!

சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…

5 hours ago

இஸ்ரேல் போட்ட ஸ்கெட்சில் இருந்து ஈரான் தலைவர் காமெனி தப்பியது எப்படி? வெளியான சீக்ரெட்!

ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…

6 hours ago