18 முதல் 59 வயதினருக்கு இலவச பூஸ்டர் டோஸ் – டெல்லி அரசு!

தலைநகர் டெல்லியில் கொரோனா தொற்று தற்பொழுது அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன், 2 டேஸ் தடுப்பூசிகள் எடுத்துக்கொண்டவர்கள் அடுத்ததாக பூஸ்டர் தடுப்பூசி எடுத்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், டெல்லியில் 18 முதல் 59 வயதுக்குட்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக வழங்குவதாக தற்பொழுது டெல்லி அரசு அறிவித்துள்ளது. முன்னதாக 2 டோஸ் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள் இந்த போஸ்டர் டோஸை எடுத்துக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக சுகாதார பணியாளர்கள், முதல்நிலை ஊழியர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த பூஸ்டர் டோஸ் இலவசமாக வழங்கப்பட்ட நிலையில், தற்போது 18 முதல் 59 வயதுக்குட்பட்டவர்களுக்கு இந்த இலவசமாக வழங்கப்பட உள்ளது. இரண்டாவது டோஸ் தடுப்பூசி எடுத்து 9 மாதங்கள் நிறைவடைந்த 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவரும் இந்த பூஸ்டர் டோஸை எடுத்துக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
இஸ்ரேலில் குடியிருப்புகளில் குண்டு மழை பொழியும் ஈரான்.! கிளஸ்டர் குண்டுகள் என்ன செய்யும்.?
June 20, 2025
தனுஷின் ‘குபேரா’ எப்படி இருக்கு.? நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள்.! இதோ டிவிட்டர் விமர்சனம்.!
June 20, 2025
”பட்டாசு விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்” – மதுரை கிளை உத்தரவு.!
June 20, 2025