கோத்ரா ரயில் எரிப்பு வழக்கின் மனுக்கள் மார்ச் 24 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணை.
கோத்ரா ரயில் எரிப்பு வழக்கு தொடர்பான மனுக்கள் மார்ச் 24 ஆம் தேதி விசாரிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பல குற்றவாளிகளின் ஜாமீன் மனுக்கள் மற்றும் குஜராத் அரசின் மேல்முறையீடு மனுக்கள் விசாரிக்கப்படும்.
விளக்கப்படத்தின் நகல் :
இதற்கிடையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்ஹா மற்றும் ஜே.பி.பார்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு, குஜராத் அரசு மற்றும் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட தண்டனைகள் மற்றும் இதுவரை சிறையில் இருந்த காலம் போன்ற விவரங்களைக் கொண்ட விளக்கப்படத்தின் நகலை வழங்குமாறு குஜராத் அரசு வழக்கறிஞர்களுக்கு உத்தரவிட்டது.
கோத்ரா ரயில் எரிப்பு :
2002 ஆம் ஆண்டு அயோத்தியில் இருந்து திரும்பிய 59 இந்து யாத்ரீகர்கள் மற்றும் கரசேவகர்கள் இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள கோத்ரா ரயில் நிலையம் அருகே சபர்மதி விரைவு ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் கொல்லப்பட்டனர். இது மாநிலத்தில் கலவரத்தைத் தூண்டியது. இதையடுத்து உடனடியாக மாநில அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட நானாவதி-மேத்தா கமிஷன், 2008 இல், இந்த சம்பவம் முஸ்லிம் கும்பலால் திட்டமிட்டு செய்யப்பட்டது என்று முடிவு செய்தது.
மாநில அரசு மேல்முறையீடு :
பிப்ரவரி 2011 இல், விசாரணை நீதிமன்றம் நானாவதி-மேத்தா கமிஷன் அறிக்கையை ஆதாரமாக நம்பி, ரயிலை எரித்ததற்காக 31 முஸ்லிம்களை குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தது. இந்த வழக்கில் 11 குற்றவாளிகளுக்கு விசாரணை நீதிமன்றம் மரண தண்டனை விதித்ததோடு 20 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கியது.
குஜராத் உயர் நீதிமன்றம் தண்டனைகளை உறுதி செய்ததோடு 11 குற்றவாளிகளின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தது. பிப்ரவரி 20ம் தேதி 11 குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றியதை எதிர்த்து மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
வழக்கு விசாரணை :
மேலும், குற்றம் சாட்டப்பட்ட பலர், இந்த வழக்கில் தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உறுதி செய்து உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கில் இதுவரை இரண்டு குற்றவாளிகளுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. மேலும் ஏழு ஜாமீன் மனுக்களின் தீர்ப்பு நிலுவையில் உள்ள நிலையில் இந்த வழக்கு தொடர்பான மனுக்கள் மார்ச் 24 ஆம் தேதி விசாரிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.