மத்திய பிரதேசத்தில் கொரோனா சிகிச்சை மையங்களை மூட அரசு உத்தரவு!

Default Image

மத்திய பிரதேசத்தில், தலைநகர் போபாலை தவிர, பிற பகுதியில் உள்ள கொரோனா சிகிச்சை மையங்களை மூடுமாறு அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகின்ற நிலையில், மத்திய பிரதேசத்தில் கொரோன தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. இதனால் பள்ளிகள் உட்பட, பல்வேறு இடங்களில் கொரோனா சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தது. அதன்படி, மாநிலம் முழுவதும் 225-க்கும் மேற்பட்ட மையங்கள் திறக்கப்பட்டது.

தற்போது மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் குறைந்து, கட்டுக்குள் வந்துள்ள நிலையில், இந்த சிகிச்சை மையங்களில் அதிக நோயாளிகள் இல்லை. எனவே தலைநகர் போபாலை தவிர, பிற பகுதியில் உள்ள கொரோனா சிகிச்சை மையங்களை மூடுமாறு அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி இந்த சிகிச்சை மையங்கள் மூடப்பட்டு வருகின்றன.

ஆனால் முன்னாள் முதல் மந்திரியும் மாநில காங்கிரஸ் தலைவருமான கமல்நாத் , இந்த நடவடிக்கையை குறை கூறியுள்ளார்கள். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சட்டசபை கூட்டத் தொடரை ரத்து செய்திருக்கும் நிலையில், இந்த சிகிச்சை மையங்களை மூடுவது ஏன் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். ஆனால் முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான் தனது முடிவை நியாயப்படுத்தி உள்ள நிலையில், தேவைப்பட்டால் அரசிடம் அனுமதி பெற்று மீண்டும் அந்த மையங்களை திறக்கலாம் எனவும் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Rajnath Singh
IAF operation sindoor
IPL 2025
Vikram Misri
ind vs pak war Donald Trump
ind vs pak war