டெல்லியில் போராட்டம் நடத்தி வரக்கூடிய விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அரசு தற்பொழுதும் தயாராக உள்ளது என மத்திய வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் கிட்டத்தட்ட மூன்று மாத காலமாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு கட்டமாக மத்திய அரசு விவசாயிகள் உடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ள நிலையில் இன்னும் அவர்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் அசாம் தலைநகர் கவுகாத்தியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய மத்திய வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமர் அவர்கள், நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி அவர்கள் பேசும்பொழுது புதிய மூன்று வேளாண் சட்டங்கள் தொடர்பாக பிரிவு வாரியாக விவாதிக்க தயார் என அவர் தெரிவித்ததாகவும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் நாங்கள் தொடர்ந்து தொடர்பில் தான் இருக்கிறோம். அவர்களுடன் அரசு ஒவ்வொரு பிரிவாக விவாதிப்பதற்கு தயாராக இருக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…