ஒடிசாவில் கனமழை : கடந்த 3 நாட்களில் 7 பேர் உயிரிழப்பு, 3 பேர் மாயம்!

Default Image

ஒடிசாவில் கனமழை பெய்து வருவதால், கடந்த 3 நாட்களில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த சில மாதங்களாகவே இந்தியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் ஒடிசாவின் சில பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கடந்த 3 நாட்களில் மட்டும் ஒடிசாவில் பெய்த கன மழையால் 7 பேர் உயிரிழந்துள்ளனர்,2 பேர் காணாமல் போயுள்ளனர். பல மாவட்டங்களில் இந்த கனமழை வெள்ள அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் அங்கு தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு நீரில் மூழ்கிய மக்களை தேடும் பணி நடைபெறுகிறது. அங்கு உள்ள விவசாய நிலங்களின் பரந்த திட்டுகள் மற்றும் பயிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கி உள்ளதாம். நீரை தொடர்ந்து வெளியேற்றி வருகின்றனர், இந்த வெளியேற்றத்தை பார்வையிடுவதற்காக மூத்த அதிகாரிகள் தற்பொழுது பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர் .சிறப்பு நிவாரண ஆணையர் ஜீனா கூறுகையில், கிட்டத்தட்ட 7000 பேர் தாழ்வான மற்றும் பாதுகாப்பற்ற பகுதிகளிலிருந்து மற்ற பகுதிகளுக்கும் வெளியேற்றப்பட்டு உள்ளனர் என கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்