ஹிமாச்சலப்பிரதேசத்தில் உள்ள கின்னூரில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் புதைக்குழிகளில் சிக்கிய 14 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களாக ஹிமாச்சலப்பிரதேசத்தில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் ஹிமாச்சலப்பிரதேசத்தில் உள்ள கின்னூரில் நேற்று மதியம் 12.45 மணியளவில் ரெகாங் பியோ-சிம்லா என்ற நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலச்சரிவில் பல வாகனங்கள் புதைகுழியில் சிக்கியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்நிலையில் ராம்பூர்-ஜூரி என்ற இடத்தில் 40 பயணிகளுடன் சென்ற பேருந்து மீது பாறைகள் உருண்டு மேல் விழுந்ததால் நிலச்சரிவில் சிக்கியுள்ளது. அருகில் சென்று கொண்டிருந்த கார் மீதும் பாறைகள் விழுந்துள்ளது.
தகவலறிந்து வந்த இந்திய-திபெத் எல்லை பாதுகாப்பு படையினர் பேருந்து மற்றும் வாகனங்களில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலச்சரிவில் சிக்கியவர்களில் இதுவரை 13 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.
மேலும், இதில் சிக்கி 14 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர். இன்னும் பலர் இந்த நிலச்சரிவில் சிக்கியுள்ளதால் பலி எண்ணிக்கை உயர வாய்ப்பிருப்பதாக கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவர்கள் இருவர் செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு…
டெல்லி : பாகிஸ்தானுடனான எல்லையில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டது, ஆனால் இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் இன்னும் தொடர்கிறது. இந்த நிலையில், ராணுவ நடவடிக்கைகளுக்கான…
சென்னை : சமீபகாலமாக நடிகர் விஷாலுக்கு உடல் நலம் சரியில்லாமல் இருப்பது ஒரு சோகமான விஷயமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால், கடந்த ஜனவரி…
மதுரை : உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான, அழகர் வைகையாற்றில் இறங்கும் வைபவம், இன்று சிறப்பாக…
மதுரை : சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, இன்று பெருமாள் கள்ளழகர் வேடம்பூண்டு பூப்பல்லக்கில் பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கும்…