ஹிண்டன்பர்க்கின் அறிக்கை தவறானது, ஆதாரமற்றது! அதானி குழுமம்

ஹிண்டன்பர்க் ரிசர்ச் வெளியிட்ட அறிக்கை தவறானது மற்றும் ஆதாரமற்றது என்று அதானி குழுமம் தெரிவித்துள்ளது.

ஹிண்டன்பர்க் ரிசர்ச் வெளியிட்ட அறிக்கை தவறானது மற்றும் ஆதாரமற்றது என்று அதானி குழுமம் தெரிவித்துள்ளது.

அதானி குழுமத்தின் மீது ஹிண்டன்பர்க்-ஆல் சுமத்தப்பட்ட மோசடி குற்றச்சாட்டுகளின் அறிக்கை முற்றிலும் தவறானது, மற்றும் ஆதாரமற்றது என அதானி குழுமம் கூறியிருக்கிறது. பங்குகளை கையாளுதல் மற்றும் அக்கவுண்ட்ஸ் மோசடியில் பங்கேற்றதாக, அதானி குழுமத்தின் மீது ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை வெளியிட்டிருந்தது. இதனைத்தொடர்ந்து அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் ரூ.46,086 கோடியை இழந்தது.

ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கையின்படி, அதானி குழுமத்தின் நிறுவனரும்,  தலைவருமான கௌதம் அதானி, குழுமத்தின் 7 முக்கிய நிறுவனங்களின் பங்கு விலை, உயர்வு காரணமாக அவரது நிகர மதிப்பு சுமார் $120 பில்லியன் வரை உயர்ந்தது. மேலும் இந்த நிறுவனங்கள் கடந்த 3 ஆண்டுகளில் சராசரியாக 819% சதவீதம் அதிகரித்தது என்று தெரிவித்திருந்தது.

ஆசியாவின் மிகப்பெரும் பணக்காரரான அதானி குழுமத்தின், அதானி  எண்டர்பிரைசஸ் எஃப்பிஓ(FPO) வை சேதப்படுத்தும் மற்றும் மோசமான நோக்கத்துடன் ஹிண்டன்பர்க் இந்த அறிக்கையை வெளியிட்டதாக அதானி  குழுமம் கூறியது. ஹிண்டன்பர்க், இந்த அறிக்கையை வெளியிடும் முன், தகவலை சரி பார்ப்பதற்கு எந்தவித முயற்சியும் எடுக்கவோ, எங்களைத் தொடர்பு கொள்ளவோ இல்லை.

தவறான தகவல் மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுடன் குழுமத்தின் நற்பெயரை பாதிக்கும் வகையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது இது எங்களுக்கு அதிர்ச்சியளிக்கிறது என்று அதானி குழும சிஎஃப்ஓ ஜுகேஷிந்தர் சிங் கூறினார். எங்கள் தகவல் தெரிந்த மற்றும் அறிவார்ந்த முதலீட்டாளர்கள், இந்த ஆதாரமற்ற அறிக்கைகளால்  பாதிக்கப்படுவதில்லை என மேலும் கூறினார்.

unknown node