குஜராத்தின் அகமதாபாத்தை சேர்ந்த இந்தி நடிகை பாயல் ரோகத்கி சமீபத்தில் ஜவஹர்லால் நேரு குடும்பத்தை பற்றி அவதூறாக பேசி வீடியோ ஒன்றை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். இது தொடர்பாக ராஜஸ்தானை சேர்ந்த இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் பண்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அவர் கொடுத்த புகாரின் பேரில் நேற்று முன்தினம் பாயல் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் அவர் நேற்று ராஜஸ்தானின் பண்டியில் உள்ள கூடுதல் தலைமை நீதித்துறை மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அங்கு அவர் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்து இருந்தார். ஆனால் அவரது மனுவை நீதிபதி நிராகரித்தார்.மேலும் வருகின்ற 24-ம் தேதி வரை பாயலை நீதிமன்ற காவலில் சிறையில் வைக்க நீதிபதி உத்தர விட்டார். இதை தொடர்ந்து பாயல் ரோகத்கி சிறையில் அடைக்கப்பட்டார்.
நடிகை பாயல் ரோகத்கி வழக்கறிஞர் பூபேந்திர சகாய் சக்சேனா ஜாமீன் கேட்டு உச்சநீதி மன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய இருப்பதாகவும் கூறினார்.
சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…
டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…
கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…
மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…