ஹாங்காங்-ஏர் இந்தியா விமானங்கள் நான்காவது முறையாக நிறுத்தம்.!

இந்த வார தொடக்கத்தில் ஒரு சில பயணிகளுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்ததை அடுத்து தற்போது, மும்பையில் இருந்து நவம்பர் 10 வரை ஏர் இந்தியா விமானங்களை ஹாங்காங் தடை செய்துள்ளது.
அந்த வகையில், இந்தியாவில் இருந்து ஏர் இந்தியா விமானங்களை ஹாங்காங் அரசாங்கம் தடைசெய்தது இது நான்காவது முறையாகும்.
இதற்கு முன்னர், செப்டம்பர் 20-அக்டோபர் 3 மற்றும் ஆகஸ்ட் 18-ஆகஸ்ட் 31 மேலும் அக்டோபர் 17-அக்டோபர் 30 ஆகிய நாட்களில் டெல்லி-ஹாங்காங் விமானங்கள் தடை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், தொற்றுநோய் காரணமாக மார்ச் 23 முதல் இந்தியாவில் திட்டமிடப்பட்ட சர்வதேச பயணிகள் விமானங்கள் தொடர்ந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்த ஆண்டு மே மாதத்திலிருந்து வந்தே பாரத் மிஷனின் கீழ் மற்றும் இந்த ஆண்டு ஜூலை முதல் இருதரப்பு விமான ஒப்பந்தங்களின் கீழ் சிறப்பு சர்வதேச விமானங்களை இயக்க இந்திய விமான நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025