பிரசவ வலியால் துடித்த நிறை மாத கர்ப்பிணியை, மருத்துவமனையில் அனுமதிப்பதற்காக, ஒருவருக்கு மட்டும் சிறப்பு ரயிலை இயக்கிய ஐதராபாத், ‘மெட்ரோ’ ரயில் நிர்வாகத்துக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
தெலுங்கானா மாநிலம், ஐதராபாதில், கடந்த 13 மற்றும் 14ம் தேதிகளில் கன மழை பெய்தது. இதில் அந்த நகரமே வெள்ளக்காடாக மாறியதால், சாலை போக்குவரத்து முற்றிலுமாக ஸ்தம்பித்ததுப் போனது. இந்நிலையில், கடந்த 14ம் தேதி இரவு, 10:00 மணிக்கு, கர்ப்பிணி ஒருவர், விக்டோரியா மெமோரியல் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வந்தார். பிரசவ வலியால் துடித்த அவர், அங்கிருந்த ஊழியர்களிடம், மியாபூர் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் என்றார். வழக்கமாக இரவு, 9:00 மணியுடன், மெட்ரோ ரயில் சேவை முடிவடையும்.கர்ப்பிணியின் நிலையை கருத்தில் வைத்து, உயர் அதிகாரிகளின் அனுமதி பெற்று, அவர் ஒருவருக்காக மட்டும், சிறப்பு ரயிலை மெட்ரோ நிர்வாகம் இயக்கியது. இந்த செயல், பல்வேறு தரப்பிலும் பாராட்டுகளை குவித்து வருகிறது.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…