இன்று நெருப்பு வளைய சூரிய கிரகணம் இந்தியாவில் பல பகுதிகளில் தோன்றியது.
பல இந்தியர்களைப் போல நானும் சூரிய கிரகணத்தை பார்க்க இருந்தேன்.ஆனால் மேக மூட்டம் காரணமாக பார்க்க முடியவில்லை என மோடி கூறியுள்ளார்.
இன்று நெருப்பு வளைய சூரிய கிரகணம் இந்தியாவில் பல பகுதிகளில் தோன்றியது. தமிழகத்தில் பல இடங்களில் நெருப்பு வளைய சூரிய கிரகணத்தை பார்க்க பொதுமக்கள் அதற்குரிய கருவிகளான தொலைநோக்கி மற்றும் சூரிய கண்ணாடி மூலம் பார்த்தனர். தமிழகத்தில் கோவை உள்ளிட்ட இடங்களில் மேக மூட்டம் காரணமாக சூரிய கிரகணத்தை பார்க்க முடியவில்லை.
unknown nodeஇந்நிலையில் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டார்.அதில் “பல இந்தியர்களைப் போல நானும் சூரிய கிரகணத்தை பார்க்க இருந்தேன்.ஆனால் மேக மூட்டம் காரணமாக பார்க்க முடியவில்லை. கோழிக்கோடு உள்ளிட்ட பகுதிகளில் தோன்றிய சூரிய கிரகண நிகழ்வினை நேரலை வீடியோ வாயிலாக பார்த்ததாக பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்.