அரசின் நிலைப்பாடு விசாரணையில் இந்தியா பங்கேற்று ஒத்துழைக்க வேண்டும்.! கனடாவின் துணை ராணுவ தளபதி..

புதுடெல்லியில் இந்திய ராணுவமும், அமெரிக்க ராணுவமும் இணைந்து நடத்தும் 13வது இந்திய-பசிபிக் ராணுவத் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளின் மூன்று நாள் மாநாட்டை, மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்துள்ளார். இந்த மாநாடு புதுடெல்லியில் உள்ள மானெக்ஷா மையத்தில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் 35 நாடுகளின் ராணுவ தளபதிகள் பங்கேற்கின்றனர்.
இதில் கனடாவின் துணை ராணுவ தளபதி மேஜர் ஜெனரல் பீட்டர் ஸ்காட்டும் கலந்து கொள்கிறார். கடந்த ஜூன் மாதம் 18ம் தேதி காலிஸ்தான் அமைப்பை சேர்ந்த ஹர்தீப் சிங் நிஜார் சுட்டுக்கொல்லப்பட்டதையடுத்து, இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையே இருந்த உறவில் விரிசல் ஏற்பட்டது. இந்த நிலையில் கனடாவின் துணை ராணுவ தளபதி மேஜர் ஜெனரல் பீட்டர் ஸ்காட் மாநாட்டில் கலந்துகொள்கிறார்.
மாநாட்டில் கலந்துகொள்வதற்கு முன்னதாக செய்தியார்களிடம் பேசிய கனடாவின் துணை ராணுவ தளபதி மேஜர் ஜெனரல் பீட்டர் ஸ்காட், இரு நாட்டுப் படைகளும் ஒருவரிடமிருந்து ஒருவர் கற்றுக் கொள்வதில் கவனம் செலுத்துவதோடு ஒன்றாக பயிற்சி மற்றும் உடற்பயிற்சி செய்வதற்கான வாய்ப்புகளைக் கண்டறியும் என்று தெரிவித்துள்ளார்.
அவர் பேசுகையில், “இந்தோ-பசிபிக் படைகளின் தலைவர்கள் மாநாட்டின் ஒரு பகுதியாக நாங்கள் இங்கு இருப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். பசிபிக் பிராந்தியத்தின் முடிவில் கூட்டாளர்களுடன் பயிற்சி அல்லது பயிற்சிகளில் நாங்கள் பங்கேற்கும் வாய்ப்புகளை கனடா தொடர்ந்து தேடுகிறது. இந்த மாநாடு எங்களுக்கு இதே போன்ற நலன்களைக் கொண்ட பிற நாடுகளின் தலைவர்களைச் சந்திப்பதற்கான ஒரு வாய்ப்பை வழங்குகிறது.”
“பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் அறிக்கையை நான் முழுமையாக அறிவேன். எங்கள் அரசாங்கத்தின் நிலைப்பாடு, விசாரணையில் இந்தியா பங்கேற்க வேண்டும் மற்றும் ஒத்துழைக்க வேண்டும். ஆனால் இந்தோ-பசிபிக் மாநாட்டில் கலந்துகொள்ள எங்களுக்கு எந்த தயக்கமும் இல்லை. இராணுவம் முதல் இராணுவம் வரை உறவுகளை கட்டியெழுப்ப நாங்கள் இங்கு இருக்கிறோம்.”
மேலும், “இது ஒரு அரசியல் பிரச்சினை. இதனை அரசியல் தலைவர்களே சமாளிப்பார்கள். இந்த மாநாட்டின் மூலம் இரு நாட்டுப் படைகளும் ஒருவரிடமிருந்து ஒருவர் கற்றுக் கொள்வதில் கவனம் செலுத்துவதோடு ஒன்றாக பயிற்சி மற்றும் உடற்பயிற்சி செய்வதற்கான வாய்ப்புகளைக் கண்டறியும்.” என கனடாவின் துணை ராணுவ தளபதி மேஜர் ஜெனரல் பீட்டர் ஸ்காட் கூறியுள்ளார்.