கேரளா மாநிலத்தை சேர்ந்த ஃபஹீமா ஷிரீன் என்பவர் அம்மாநில கலோரியில் இளங்கலை பட்டம் பயின்று வருகிறார். இவர் படிக்கும் கலோரியின் விடுதியில் இவர் விதியை மீறி மொபைல் இன்டர்நெட் உபயோகப்படுத்தியதாக கூறி அவரை கல்லூரியில் இருந்து நிர்வாகம் நீக்கியாக தெரிகிறது.
இதனை தொடர்ந்து, கேரளா நீதிமன்றத்தில், இம்மாணவி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் மாணவி சார்பாக வாதாடிய வக்கீல், கல்லூரி நிர்வாகத்தின் இந்த செயல், இந்திய சட்டப்பிரிவு 19 (1) A யின் படி பொதுமக்களின் கருத்து சுதந்திரத்தினை பறிக்கும் செயல் எனவும், மாணவர்கள் அறிவை வளர்க்கவும் , கருத்துக்களை அனைவரும் தெரிவிக்கவும், இன்டர்நெட் அடிப்படை உரிமை என 2016ஆம் ஆண்டு ஐநா கூறியதையும் சுட்டி காட்டினார்.’
இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி, கேரளா சட்டமன்றத்தில், 2017ஆம் ஆண்டு நிதியமைச்சர் கூறுகையில் இணையதளம் பயன்படுத்துவதை அடிப்படை உரிமையக கொண்டு அனைவரும் இணையதள சேவை பயன்படுத்த வழிவகை செய்யப்படும் என கூறினார். ஆதலால் இணையதள சேவை பயன்படுத்துவது என்பது இந்திய சட்ட பிரிவு 21-ஆன தனி மனித உரிமை சட்டமாகும். அதேபோல பிரிவு 21-A என்பது கல்வி உரிமை சட்டம் என இரு பிரிவுகளின் கீழ் வருகிறது என தீர்ப்பளித்தார்.
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே…