இந்தியாவில் குறைந்துள்ளதா கொரோனா பாதிப்பு? கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் பாதிப்பு எவ்வளவு தெரியுமா?

Default Image

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு 59 ஆயிரத்தை கடந்திருந்தாலும், முந்தைய நாட்களை கணக்கிடுகையில் இன்று பாதிப்பு குறைவு.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டேதான் சென்றது. தினமும் ஒரு லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கொண்டிருந்தனர். இந்நிலையில் உலக அளவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருந்து வந்தது. கடந்த நாட்களை கணக்கிடுகையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 59 ஆயிரத்துக்கும் அதிகமான பேர் தான் கொரோனாவால் பாதிக்கப் பட்டுள்ளனர். இது முந்தைய நாட்களை கணக்கிடுகையில் இரண்டில் ஒரு மடங்காக குறைந்துள்ளது. பாதிப்பும் உயிரிழப்பும் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் குறைந்துள்ளது என்று கூறலாம்.

மொத்தமாக இந்தியாவில் 6,682,073 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 103,600 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 5,659,110 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனாவால் 59,893 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், 886 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது மருத்துவமனைகளில் 919,363 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்