செய்தியாளர்கள் பாதிக்கப்படுவது வருத்தமளிக்கிறது.! மத்திய சுகாதாரத்துறை .!

செய்தியாளர்கள் கொரோனாவால் பாதிக்கப்படுவது வருத்தமளிப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று தமிழகத்தில் இரண்டு செய்தியாளர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையெடுத்து செய்தியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இந்நிலையில், செய்தியாளர்கள் கொரோனாவால் பாதிக்கப்படுவது வருத்தமளிப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
செய்தியாளர்களுக்கு யாருக்கெல்லாம் பரிசோதனை தேவையோ அவர்கள் உடனடியாக பரிசோதனை செய்யப்படும் எனவும் சரியான வழிகாட்டுதலை செய்தியாளர்கள் முறையை பின்பற்ற வேண்டும் எனவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்தது.
சற்று முன் மும்பையில் 53 செய்தியாளர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
”சதாம் உசேனுக்கு ஏற்பட்ட கதி தான், ஈரான் தலைவருக்கு ஏற்படும்” ஈரானுக்கு இஸ்ரேல் பகிரங்க எச்சரிக்கை.!
June 17, 2025
அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜா கைது.!
June 17, 2025
”சாதிவாரி கணக்கெடுப்பு சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும்” – மத்திய அரசுக்கு விஜய் அறிக்கை.!
June 17, 2025