கேரளாவில் கின்னஸ் சாதனைக்கு விண்ணப்பிக்கப்பட்ட பலாப்பழம்.!

கேரளாவில் உள்ள ஒரு தோட்டத்தில் 51.4 கிலோ எடையுள்ள பலாப்பழம் வளந்துள்ளதையடுத்து, அதனை உலக சாதனைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

கேரளாவில் உள்ள ஒரு தோட்டத்தில் 51.4 கிலோ எடையுள்ள பலாப்பழம் வளந்துள்ளதையடுத்து, அதனை உலக சாதனைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

கேரள மாநிலம், கொல்லம் மாவட்டத்தில் எடமுழக்கல் எனும் கிராமத்தில் உள்ள ஒரு குடும்பத்தினர் தங்கள் தோட்டத்தில் பெரிய அளவிலான பலாப்பழம் ஒன்று வளர்ந்திருப்பதைக் கண்டறிந்தனர். அதனை அவர்கள் எடைபார்களில், 51.4 கிலோவாக இருந்தது.

இந்நிலையில், அந்த குடும்பத்தின் உறுப்பினர் ஜான்குட்டி கூறுகையில், உலகின் கனமான பலாப்பழம் 42.72 கிலோ எடையுள்ளதாகவும், அது  புனேவில் இருந்தாக தெரிவித்தார். ஆனால் அதைவிட இது எடை கூடியதால், இதனை கின்னஸ் உலக சாதனை மற்றும் லிம்கா புத்தக பதிவுகளுக்கு விண்ணப்பித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.