Categories: இந்தியா

பாலியல் புகார்… கர்நாடகா எம்.பி பிரஜ்வல் சஸ்பெண்ட்.! மஜத கட்சி அதிரடி நடவடிக்கை…

Published by
மணிகண்டன்

Prajwal Revanna : பாலியல் புகார் விசாரணை முடியும் வரையில் மஜத எம்.பி பிரஜ்வல் ரேவண்ணா கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கர்நாடகாவின் ஹாசன் தொகுதி எம்.பியாக இருப்பவர் பிரஜ்வல் ரேவண்ணா. மதசார்பற்ற ஜனதா தளம் (JDS) கட்சியை சேர்ந்த இவர் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன், முன்னாள் முதல்வர் எச்.டி.குமாரசாமின் அண்ணன் மகன் ஆவார்.

அண்மையில், பிரஜ்வால் ரேவண்ணா இருக்குப்படியான பாலியல் வீடியோ ஒன்று வெளியாகி கர்நாடகா அரசியலில் பெரும் புயலை கிளப்பியது. மேலும், பாதிக்கப்பட்டதாக கூறப்படும் பெண் அளித்த புகாரின் பெயரில் பிரஜ்வல் ரேவண்ணா மீதும், முன்னாள் அமைச்சர் ரேவண்ணா மீதும் ஹாசன் பகுதி காவல்நிலையத்தில் புகார் பதியப்பட்டுள்ளது.

கர்நாடக அரசியலில் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி, பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து வருகிறது. ஹாசன் தொகுதியில் மஜத சார்பில் மீண்டும் பிரஜ்வல் ரேவண்ணா தான் போட்டியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படியான சமயத்தில் தற்போது இந்த வழக்கை, சிறப்பு புலனாய்வு குழு (எஸ்.ஐ.டி) விசாரணை செய்து வருகிறது. பிரஜ்வல் ரேவான்னா மீது கட்சி ரீதியிலான நடவடிக்கை எடுக்க கோரி கோரிக்கைகள் வலுத்த நிலையில், இன்று தேவகவுடா தலைமையில் கட்சி ஒழுங்குமுறை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அந்த கூட்டத்தின் முடிவில், பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிரான எஸ்ஐடி விசாரணையை நாங்கள் (JDS ) வரவேற்கிறோம் என்றும், எஸ்ஐடி விசாரணை முடியும் வரை பிரஜ்வல் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்ய எங்கள் கட்சியின் தேசிய தலைவருக்கு பரிந்துரை செய்துள்ளோம் என மஜக கமிட்டி தலைவர் தேவேகவுடா கூறினார்.

மஜத கட்சித் தலைவர் ஹெச்.டி.குமாரசாமி இது குறித்து கூறுகையில், சிறப்பு விசாரணை குழுவின் விசாரணை முடியும் வரை பிரஜ்வல் ரேவண்ணா மஜக கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவித்தார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

3 minutes ago

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

17 minutes ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

54 minutes ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

1 hour ago

வரியை குறைக்க அமெரிக்கா – சீனா முடிவு.! பரஸ்பர வரி விதிப்பில் திடீர் மாற்றம்.!

வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…

2 hours ago

அமெரிக்காவுக்கு என்ன வேலை? போர் நிறுத்தியது தவறு…சுப்பிரமணியன் சுவாமி பேச்சு!

டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…

3 hours ago