வீட்டில் இருந்தே வேலை அறிவிப்பு! இன்டர்நெட்-டுக்கு தட்டுப்பாடு!

கொரோனா பாதிப்பால் அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் வைரஸ் பரவுவதை தடுக்கும் நடவடிக்கையாக வீட்டில் இருந்த ஊழியர்கள் பணிபுரியும் திட்டத்தை பல்வேறு நிறுவனங்கள் செயல்படுத்த துவங்கி உள்ளன. இதனால் இணைய பயன்பாடு அதிகமாகி வருகிறது.
இது குறித்து மொபைல் சேவை நிறுவனங்கள் சங்கத்தின் இயக்குனர் ஜெனரல் ராஜன் மேத்யூஸ் கூறுகையில், ‘இந்த சங்கத்தில் உள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இணைய பயன்பாடு தொடர்பான புள்ளிவிவரங்களை அனுப்பியுள்ளன. இதன்படி இணைய பயன்பாடு சராசரியாக 10 சதவீதம் அதிகரித்துள்ளது என தெரியவந்துள்ளது.
அதே நேரத்தில் பயன்பாடு அதிகரித்ததால் இணைய சேவையில் பாதிப்பு ஏற்படாது எனவும் அவர்கள் கூறியுள்ளனர். இணைய சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு எந்த பிரச்சனையும் ஏற்படாத அளவுக்கு நெட்வொர்க் அமைத்து செயல்படுத்தி வருகின்றன. தற்போது இந்த நெட்வொர்க்கில் முதல் 65 முதல் 70 சதவீதம் தான் பயன்பாட்டில் உள்ளது. எனவே பயன்பாடு மேலும் அதிகரித்தாலும் எளிதாக சமாளித்துவிடலாம்.’ என்று கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
இஸ்ரேலில் குடியிருப்புகளில் குண்டு மழை பொழியும் ஈரான்.! கிளஸ்டர் குண்டுகள் என்ன செய்யும்.?
June 20, 2025
தனுஷின் ‘குபேரா’ எப்படி இருக்கு.? நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள்.! இதோ டிவிட்டர் விமர்சனம்.!
June 20, 2025
”பட்டாசு விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்” – மதுரை கிளை உத்தரவு.!
June 20, 2025