கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்த பின் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் ஜே.பி.நட்டா!

BJP national leader JP Natta is scheduled to visit West Bengal, Assam and Gujarat to attend several meetings.

பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அவர்கள் மேற்கு வங்கம், அசாம் மற்றும் குஜராத்தை பார்வையிட சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல கூட்டங்களில் கலந்துகொள்ள உள்ளார்.

பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அவர்கள் கடந்த மாதம் 13-ஆம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இதனையடுத்து அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், அவரது குடும்பத்தினருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து, அனைவருக்கும் தொடர்ந்து மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதனையடுத்து நட்டா கொரோனாவில் இருந்து குணமடைந்த பின், அந்த தகவலை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு குணமடைய வேண்டி எனக்காக பிரார்த்தனை செய்து ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில்,  பாதிப்பிலிருந்து மீண்டு எழுந்த ஜே.பி.நட்டா அவர்கள் மேற்கு வங்கம், அசாம் மற்றும் குஜராத்தை பார்வையிட சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல கூட்டங்களில் கலந்துகொள்ள உள்ளார்.

ஜனவரி 4-ஆம் தேதி மாநில கட்சித் தலைவர் பாட்டில், முதல்வர் விஜய் ரூபானி, துணை முதல்வர் நிதின் பட்டேல் மற்றும் பிற மூத்த தலைவர்களுடன் ஒரு முக்கியமான சந்திப்புக்கு தலைமை தாங்குவார் என்று கூறப்படுகிறது. ஜனவரி 5 முதல் 7 வரை அகமதாபாத்தில் நடைபெறும் பாஜக ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கம் இணைப்பு கூட்டத்தில் அவர் கலந்து கொள்கிறார்.

அதன்பின் ஜனவரி 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் மேற்கு வங்காளத்திற்கு செல்கிறார். மேலும், தனது வருகையின் போது மாநிலத்தில் பாஜக தலைவர்களை சந்தித்து புதிய உறுப்பினர்களை கட்சியில் சேர்க்க உள்ளதாக கூறப்படுகிறது.