கான்பூர் துப்பாக்கி சூடு.! நக்சலைட்டுகளாக விகாஷ் துபே செயல்பட்டதாக போலீசார் குற்றச்சாட்டு.!

Published by
Ragi

கான்பூர் ரவுடியை பிடிக்க நடந்த துப்பாக்கிச் சூட்டில் 8 போலீசார் கொன்ற வழக்கில் விகாஷ் துபே நக்சலைட்டுகளாக செயல்பட்டதாக போலீசார் குற்றம் சாட்டியுள்ளார்.

உத்தரபிரதேசத்தில் உள்ள கான்பூரில் பிரபல ரவுடியாக வலம் வருபவர் விகாஷ் துபே. இவர் மீது ஏகப்பட்ட கொலை உட்பட கொலை முயற்சி, கொலை வழக்குகள் என 60க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரை போலீசார் பிடிக்க பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் கூட கான்பூரில் உள்ள பிகாரு என்ற கிராமத்தில் பதுங்கி இருப்பதாக தெரிய வந்ததை அடுத்து, அவரை கைது செய்ய 15 பேர் கொண்ட போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். இதனை அறிந்த விகாஷ் துபே மற்றும் அவரது ஆட்கள் , போலீசாரை சுற்றி வளைத்து சுட்டதால்  8 போலீசார் உயிரிழந்தனர்.

இது குறித்து மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், விகாஷ் துபே வீட்டிலிருந்து ஆயுதங்கள் பலதை கண்டுபிடித்த பின்னர் காவலர்களை தாக்கி, அவர் நக்சலைட்டுகளாக செயல்பட்டார் என்று கூறியுள்ளார். ஆம், விகாஷ் துபே வீட்டிலிருந்து வெடிமருந்துகள், இரண்டு கிலோ வெடி பொருட்கள், ஆறு நாடுகளில் தயாரிக்கப்பட்ட கைது துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டன.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கான்பூர் கிராமிய காவல்துறை கண்காணிப்பாளர் பி. கே. ஸ்ரீவாஸ்தவா, விகாஷ் துபேவின் வீட்டில் கண்டெடுக்கப்பட்ட ஆயுதங்கள் அவரை தொடர்புடைய பிற நபர்களின் பெயரில் உரிமம் பெற்றது என்றும், ஆனால் விகாஷ் துபே அதனை பயன்படுத்தியதாகவும் கூறியுள்ளார்.

நக்சலைட்டுகள் எவ்வாறு செயல்படுமோ அதே போன்று விகாஷ் துபே மற்றும் அவரது கூட்டாளிகள் செயல்பட்டதாக தெரிவித்துள்ளார். தற்போது தப்பி சென்ற விகாஷ் துபேவை போலீசார் வலை விரித்து தேடி வருகின்றனர். மேலும் உத்திரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், விகாஷ் துபேயால் இறந்த 8 போலீசாரின் குடும்பங்களுக்கு தலா 1 கோடி ரூபாய் நிவாரண நிதி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Published by
Ragi

Recent Posts

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

6 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

6 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

6 hours ago

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

8 hours ago

300- 400 ட்ரோன்களை.., எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? புட்டு..புட்டு.. வைத்த சோஃபியா குரேஷி.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…

9 hours ago

போர் பதற்றம் : மேகாலயாவில் 2 மாதம் இரவு நேர ஊரடங்கு உத்தரவு .!

மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…

9 hours ago