நாளை முதல் கர்தார்பூர் வழித்தடம் மீண்டும் திறக்கப்படும் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள பகுதி தான் கர்தார்பூர் பகுதி. சீக்கிய மதத்தை தோற்றுவித்த குருநானக் தனது கடைசி காலத்தில் இந்த பகுதியில் தான் வாழ்ந்து மறைந்ததாக கூறப்படுகிறது. எனவே அவரது நினைவாக அப்பகுதியில் தர்பார் சாஹிப் குருத்வாரா ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
சீக்கிய மதத்தினர் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது இந்த கர்தார்பூர் பகுதியில் உள்ள குருத்வாரா சென்று தரிசிக்க வேண்டும் என்பது அவர்களது கடமை. ஆனால், கொரோனா பரவல் காரணமாக இந்த கர்தார்பூர் வழித்தடம் கடந்த ஓராண்டு காலமாக மூடப்பட்ட நிலையில் இருந்தது. அந்தப் பகுதி நாளை முதல் மீண்டும் திறக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், ஸ்ரீ குரு நானக் தேவ் ஜி மற்றும் சீக்கிய மதம் மீது பிரதமர் மோடி கொண்டுள்ள அபரிமிதமான மரியாதையை இந்த முடிவு காட்டுகிறது எனவும் குறிப்பிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,
டெல்லி : இந்தியாவின் விமானப் பாதுகாப்பு தொடர்பான குறைபாடுகள் குறித்து சமீபத்திய DGCA தணிக்கைகள் பல முக்கியமான பிரச்சினைகளை வெளிப்படுத்தியுள்ளன.…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி இந்த கூட்டத்தொடரின் போது இல்லாதது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா…
சென்னை : தமிழ்நாடு பாஜகவில் புதிய மாநில நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், நடிகை குஷ்பு உள்பட 14 பேர்…
சென்னை : நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு (EOW)…
அமெரிக்கா : அமெரிக்காவுடன் சுமுகமான வர்த்தக உடன்பாடு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நாளை மறுநாள் (ஆகஸ்ட் 1-ஆம் தேதி) முதல்…
ஆந்திரா : நாசா மற்றும் இஸ்ரோ கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்ட 'நிசார்' செயற்கைக்கோள் இன்று (ஜூலை 30, 2025) வெற்றிகரமாக…