கேரளா.. மாநிலம் முழுவதும் ஊரடங்கு!

கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமடைந்து வருவதால், இந்தியளவில் 433 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 8 பேர் உயிரிழந்த நிலையில், மத்திய

கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமடைந்து வருவதால், இந்தியளவில் 433 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 8 பேர் உயிரிழந்த நிலையில், மத்திய மற்றும் மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டுவருகின்றனர்.

இந்நிலையில், கேரளாவில் கொரோனா வைரஸால் 60க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில், இந்த வைரஸின் பரவலை குறைக்கும் விதமாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் இன்றிரவு முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என தெரிவித்தார். மேலும், எல்லைகள் எல்லாம் அடைக்கப்படும் எனவும், வெளிமாநிலங்களிலிருந்து வாகனங்கள் வருவதற்கு தடை விதித்துள்ளது என தெரிவித்தார்.