கொரோனா வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்தியதற்காக ‘உலகின் சிறந்த சிந்தனையாளராக’ கேரள சுகாதார அமைச்சரான கே. கே. ஷைலஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இங்கிலாந்தின் பிரபல பிரிட்டிஷ் பத்திரிக்கை ஒன்று ‘உலகின் சிறந்த சிந்தனையாளர்’ என்று உலகெங்கிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட 50 நபர்களில் கேரள சுகாதார அமைச்சரான கே. கே. ஷைலஜா முதல் இடம்பெற்றுள்ளார். கேரளாவில் கொரோனா வைரஸை திறம்பட கையாண்டு குறைந்த இறப்பு விகிதத்தை பெற்றதற்காக கே. கே ஷைலஜா பாராட்டப்பட்டுள்ளார். சரியான நேரத்தில் சரியாக செயல்பட்ட பெண் என்ற பெருமையை ஷைலஜா பெற்றுள்ளார்.
அடுத்ததாக இந்த பட்டியலில் நியூஸிலாந்து பிரதமரான ஜசிந்தா ஆர்டெர்ன் அவர்கள் இரண்டாவது இடத்தையும், பங்களாதேஷ் கட்டிட கலைஞரான மெரினா தபஸும் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர். மேலும் நோபல் பரிசு வென்ற டஃப்லோ, எழுத்தாளரான ஹிலாரி மாண்டேல், சுற்றுச்சூழல் ஆர்வலரான டேவிட் அட்டன்பரோ ஆகியோரும் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இந்த பிரிட்டிஷ் பத்திரிகை கே. கே. ஷைலஜா அவர்களை குறித்து கூறிய போது, ஆசிரியராக இருந்து அரசியல்வாதியாக மாறிய கே. கே. ஷைலஜா அவர்கள் 2018-ஆம் ஆண்டு பரவிய நிபானா வைரஸை சரியாக கையாண்டதை போன்று சீனாவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்த நாளில் இருந்து அதனை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை துல்லியமாக கணித்தும், அதன் தாக்கத்தையும் முழுமையாக புரிந்து கொண்டு பரிசோதனை, தனிமைப்படுத்துதல் உள்ளிட்டவற்றை நடைமுறைப்படுத்தினார் என்று கூறியுள்ளது.
இந்த பட்டியலை இறுதி செய்ய 20,000க்கும் மேற்பட்ட வாக்குகள் பதிவாகி பொது வாக்கெடுப்பில் எண்ணப்பட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் சமீபத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் பொது சேவை தினத்தன்று கொரோனா வைரஸை கட்டுப்படுத்த திறம்பட பணியாற்றியதற்காக கே. கே. ஷைலஜாவிற்கு ஐ. நா சபை பாராட்டுகளை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…
டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…
கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…
மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…