கேரளாவின் ஹைப்பர் மார்க்கெட்டில் உள்ள 78 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து முதலமைச்சர் பினராயி விஜயன் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஜூலை 10ம் தேதி கேரளாவின் ஹைப்பர் மார்க்கெட்டில் உள்ள டெலிவரி பாய்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அனைத்து ஊழியர்களும் கொரோனா பரிசோதனைக்கு உட்ப்படுத்தப்பட்டனர். அதில் முதற்கட்டமாக 91 ஊழியர்களில் 61 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
அடுத்தக்கட்டமாக நடந்த 81 மாதிரிகள் சோதனையில் 17 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் தற்போது ஹைப்பர் மார்க்கெட்டில் உள்ள 78 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அந்த மார்க்கெட்டை மூட உத்தரவிட்டுள்ளனர். மேலும், கொரோனா பரவலை குறித்து விசாரிக்கவும் முதலமைச்சர் பினராயி விஜயன் உள்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
மறு ஆய்வு கூட்டத்தில் மேலும் பேசிய பினராயி, ஜூன் மாதம் தமிழ்நாட்டில் இருந்து பல ஊழியர்கள் கொண்டுவரப்பட்டதாக உளவுத்துறை தகவல் அளித்த போதிலும், மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையின் செயலற்ற தன்மை குறித்தும் கேள்வி எழுப்பினார். இதுபோன்ற கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மார்க்கெட் எந்த தடையுமின்றி எவ்வாறு இயங்க முடியும், ஏதோ ஒரு தவறு நிகழ்ந்துள்ளது என்று கூறினார். இதுவரை மார்க்கெட்டில் உள்ள ஊழியர்களுக்கு மட்டுமே கொரோனாவிற்கான பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மதுரை : சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, இன்று பெருமாள் கள்ளழகர் வேடம்பூண்டு பூப்பல்லக்கில் பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கும்…
செங்கல்பட்டு : மாவட்டம் திருவிடந்தை இடத்தில நேற்று பாமக சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு பிரமாண்டமாக…
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…