துபாயிலிருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்திற்கு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானமானது தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒரு குழந்தை உட்பட 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மற்றும் அருகிலுள்ள பிற மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கோர விபத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் உட்பட பலர் தங்கள் வருத்தங்களை பதிவிட்டு வருகின்றனர்.
அந்த வகையில், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தனது டிவிட்டர் பக்கத்தில் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். அதில், கோழிக்கோட்டில் விமான விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக பிரார்த்தனை செய்கிறேன் . உயிர் இழந்தவர்களின் அன்புக்குரியவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
unknown node