மின்னல் தாக்கி மற்றும் பாம்பு கடித்து 35 பேர் பலி !

உத்திரபிரதேசத்தில் கடந்த சனி ,ஞாயிறு ஆகிய இரு தினங்களில் மின்னல் தாக்கி 33 பேர் இறந்து உள்ளனர்.இது குறித்து உ.பி செய்தி தொடர்பாளர் கூறுகையில் , உ.பி மாநிலத்தின் 13 மாவட்டங்களில் கடந்த சனி ,ஞாயிறு ஆகிய இரு தினங்களில் மின்னல் தாக்கி 33 பேர்இறந்து உள்ளனர்.
மேலும் இரண்டு பேர் பாம்பு கடித்து இறந்து உள்ளனர்.கான்பூர் மற்றும் பதேபூர் ஆகிய மாவட்டங்களில் தலா 7 பேரும் , ஜான்சி 5 , ஜாலவுன் 4 , ஹமீர்பூர் 3 , காசியாபாத் 2 , தியோரியா , குஷிநகர் , ஜான்பூர் , அம்பேத்கர் நகர் , பிரதாப்கர் ,கான்பூர் டெகத் , சித்ரகூட் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும் உயிர் இழந்து உள்ளனர்.
மேலும் மின்னல் தாக்கி 13 பேர் காயமடைந்து உள்ளனர். 20 வீடுகள் சேதம் அடைந்து உள்ளது என கூறினார். இந்நிலையில் இறந்துபோன 35 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் வழங்க உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யா உத்தரவு விட்டு உள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
இஸ்ரேலில் குடியிருப்புகளில் குண்டு மழை பொழியும் ஈரான்.! கிளஸ்டர் குண்டுகள் என்ன செய்யும்.?
June 20, 2025
தனுஷின் ‘குபேரா’ எப்படி இருக்கு.? நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள்.! இதோ டிவிட்டர் விமர்சனம்.!
June 20, 2025
”பட்டாசு விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்” – மதுரை கிளை உத்தரவு.!
June 20, 2025